ADDED : செப் 04, 2026 03:33 AM

அ நிறம் | அளவு
வடமதுரை: வடமதுரை அருகே, 65 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்த மாற்றுத்திறனாளி பால்சாமி, 27, என்பவரை, போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், சுக்காம்பட்டி பாலம்பூசாரியூரை சேர்ந்தவர் பால்சாமி. வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியான இவர், தேங்காய் வெட்டும் தொழில் செய்தார். இவருக்கு மனைவி, மகன் உள்ளனர்.
நேற்று முன்தினம் பால்சாமி, கரிகால கவுண்டனுார் தோட்டத்து வீட்டில் தனியே வசிக்கும், 65 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்தார்.
காயமடைந்த மூதாட்டியை அப்பகுதி மக்கள் மீட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்பகுதியினர் சிலர், பால்சாமியை பிடித்து வடமதுரை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
