ADDED : அக் 19, 2025 10:08 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாணார்பட்டி: -சாணார்பட்டி அருகே செடிப்பட்டியைச் சேர்ந்த விவசாயி குணசேகரன் 53. இவர் தோட்டத்து கிணற்றிற்கு செல்லக்கூடிய 135 அடி நீளம் உள்ள மின்சார ஒயரை துண்டித்து மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து சாணார்பட்டி போலீசாரிடம் புகார் அளித்தார்.
விசாரணையில், வேம்பார்பட்டி செடிப்பட்டியை சேர்ந்த முருகேசன் மகன் தர்மராஜ் 26 என்பவர் மின்சார ஒயரை திருடி சென்றது தெரிய வந்தது. போலீசார் தர்மராஜை கைது செய்தனர்.