ADDED : ஏப் 24, 2025 06:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: முளையூர் அரசுபுறம்போக்கு நிலத்தில் தனி நபர் ஒருவர் கம்பி வேலிகள் வைத்து ஆக்கிரமிப்பு செய்திருப்பதாக சென்னை  உயர்நீதிமன்ற மதுரை  கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
இதை விசாரித்த நீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய்துறைக்கு உத்தரவிட்டது. தாசில்தார் பாண்டியராஜ் மேற்பார்வையில் போலீசார் பாதுகாப்புடன்   ஆக்கிரமிப்புகள் மண் அள்ளும்  இயந்திரம் மூலம் அகற்றபட்டது. மண்டல துணை வட்டாட்சியர் சுந்தரபாண்டியன், கிராம நிர்வாக அலுவலர் கொண்டல்ராஜ் உள்ளிட்ட வருவாய்த்துறையினர், போலீசார் உடனிருந்தனர்.

