sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 சர்ச்களில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்

/

 சர்ச்களில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்

 சர்ச்களில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்

 சர்ச்களில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்


ADDED : ஜன 02, 2026 06:00 AM

Google News

ADDED : ஜன 02, 2026 06:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட சர்ச்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. நள்ளிரவில் பட்டாசு வெடித்து கேக் வெட்டி கொண்டாடினர்.

திண்டுக்கல்லில் துாய வளனார் சர்ச், துாய பவுல், மேட்டுப்பட்டி துாய வியாகுல அன்னை, முத்தழகுப்பட்டி, மரியநாதபுரம், கிழக்கு ஆரோக்கியமாதா நகர், மேற்கு மரியநாதபுரம்,தோமையார்புரம், சவரியார் பாளையம், குமரன் திருநகர், என்.ஜி.ஓ., காலனி, ரவுண்ட் ரோடு சி.எஸ்.ஐ., வேடபட்டி உட்பட மாவட்டத்தின் அனைத்து சர்ச்களிலும் நள்ளிரவு சிறப்பு திருப்பலி, நன்றி திருப்பலியும் நிறைவேற்றப்பட்டது. ஒருவருக்கொருவர் இனிப்புகள் வழங்கி வாழ்த்துகளை பரிமாறினர்.

நள்ளிரவு 12:00 மணிக்கு பொதுமக்கள் பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும் கொண்டாடினர்.

கன்னிவாடி: கிறிஸ்தவ சர்ச்களில் ஆங்கிலபுத்தாண்டு சிறப்பு கொண்டாட்டங்கள் நடந்தது. சர்ச்ச வளாகங்கள், மரங்களில் வர்ண விளக்குகளால் அலங்கரித்து இருந்தனர். குட்டத்துப்பட்டி புனித அந்தோணியார் சர்ச்சில் சிறப்பு ஆராதனைகள்,சிறப்பு திருப்பலி, கூட்டுப் பிரார்த்தனை நடந்தது. ஆராதனைகளுக்கு பின் ஏராளமானோர் வாழ்த்து பரிமாறிக் கொண்டனர்.கு.ஆவரம்பட்டி புனித சவேரியார் சர்ச்சில் பாதிரியார் நெப்போலியன் விழா திருப்பலி நிறைவேற்றினார். ஏ.வெள்ளோடு, சிறுநாயக்கன்பட்டி, என்.பஞ்சம்பட்டி, ஆத்துார், வக்கம்பட்டி, கன்னிவாடி, காரமடை, கரிசல்பட்டி, அனுமந்தராயன்கோட்டை, எம்.அம்மாபட்டி உள்ளிட்ட இடங்களில் சர்ச் மட்டுமன்றி, வீடுகளும் வண்ண விளக்குகள், மலர்களால் அலங்கரித்து புத்தாண்டை கொண்டாடினர்.

வடமதுரை: சி.எஸ்.ஐ., கிறிஸ்துநாதர் சர்ச்சில் நேற்றுமுன்தினம் இரவு ஆங்கில புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு போதகர் பெஞ்சமின் தலைமையில் ஆராதனை, சிறப்பு வழிபாடு நடந்தன. திருமண்டல உறுப்பினர்கள் சாந்திஅருள், டேவிட் உள்ளிட்ட சர்ச் நிர்வாகிகள் ஏற்பாட்டினை செய்திருந்தனர். திருச்சபை மக்கள் திரளாக பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us