sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

தோல்வி திறமை குறைவல்ல: தேர்வு முடிவால் வேண்டாம் மன உளைச்சல்

/

தோல்வி திறமை குறைவல்ல: தேர்வு முடிவால் வேண்டாம் மன உளைச்சல்

தோல்வி திறமை குறைவல்ல: தேர்வு முடிவால் வேண்டாம் மன உளைச்சல்

தோல்வி திறமை குறைவல்ல: தேர்வு முடிவால் வேண்டாம் மன உளைச்சல்


ADDED : மே 07, 2025 05:12 AM

Google News

ADDED : மே 07, 2025 05:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் மாவட்டத்தில் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை (மே 8) வெளிவர உள்ளது. இதேபோல் மே 19 ல் பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வர உள்ளன.

தேர்வு முடிவுகள் மதிப்பெண்களை பொறுத்து வெளியிடப்படுகிறது. இதனால் மாணவர்கள் பலர் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் கூட இதற்கு விதிவிலக்கு அல்ல. மதிப்பெண்கள் குறைந்தாலும்,வெற்றி பெறும் மதிப்பெண்கள் பெற இயலாத சூழலிலும் மாணவர்கள் மன உளைச்சல் அதிகமாகி தவறான தற்கொலை எண்ணத்திற்கு துாண்டப்படுகின்றனர். இவற்றை தவிர்க்க வேண்டும். நீட் தேர்வு முடிவுகள் வரும் போதும் அதிக அளவில் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். மதிப்பெண்கள் மட்டும் வாழ்க்கையை நிர்ணயிப்பது இல்லை என்ற தெளிவு அவர்களுக்கு ஏற்பட வேண்டும்.

பிளஸ் 2 ,பத்தாம் வகுப்பு பொது தேர்வுகளில் தோல்வி அடையும் மாணவர்கள் உடனடி தேர்வு மூலம் வெற்றி அடையலாம்.

மதிப்பெண்களை பொறுத்து வாழ்க்கை அமையப்போவது இல்லை என்ற நடைமுறை வாழ்வியலை கற்றுக்கொள்ள வேண்டும். தன்னம்பிக்கையுடன் எதிர்காலத்தை கையாள ஆசிரியர்கள், பெற்றோர்கள் அறிவுறுத்த வேண்டும். தேர்வு முடிவுகள் வெளிவந்தவுடன் பெற்றோர்கள், மாணவர்களுக்கு நேர்மறை எண்ணங்களை உருவாக்க வேண்டும். மன உளைச்சலில் உள்ள மாணவர்களை கண்டறிந்து தகுந்த ஆலோசனை வழங்க வேண்டும்.






      Dinamalar
      Follow us