ADDED : மார் 17, 2026 06:08 AM
அ நிறம் | அளவு
ஆயக்குடி: பழநி ஆயக்குடி அமரபூண்டி ரோடு ரூக்குவார்பட்டி அருகே ரோட்டோரம் இருந்த ஆலமரம் பலத்த காற்று காரணமாக ரோட்டில் சாய்ந்தது.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இரவு நேரத்தில் மரம் விழுந்ததால் கிராம மக்கள் அவதிப்பட்டனர். மாற்றுப்பாதையில் சென்றனர். பழநி தீயணைப்புத் துறையினர் மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
