ADDED : மே 09, 2025 05:34 AM
அ நிறம் | அளவு
தாண்டிக்குடி: தாண்டிக்குடி பண்ணைக்காடு ரோட்டில் மரம் விழுந்து போக்குவரத்து பாதித்தது.
நேற்று முன்தினம் இரவு 3 மணி நேரம் கொட்டிய கனமழையால் கடுகுதடி பகுதியில் ராட்சத மரம் ரோட்டில் விழுந்தது.
கொடைக்கானல் நெடுஞ்சாலைத்துறையினருக்கு தகவல் தெரிவித்த போதும் தாமதமான நிலையில் பயணிகள் மற்றும் உள்ளூர்வாசிகள்
இணைந்து மரத்தை அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர்.
இதனால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது குறிப்பிடத்தக்கது.
