UPDATED : ஜூலை 27, 2026 10:10 PM
ADDED : ஜூலை 27, 2026 09:41 PM
அ நிறம் | அளவு
கொடைக்கானல்:கொடைக்கானல் கீழ்மலை, மேல்மலை விவசாயிகள் இணைந்து கலையரங்கத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கூட்டுறவு வங்கியில் பெற்ற பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்தல், அனுபவத்தில் உள்ள நிலங்களுக்கு பட்டா வழங்குதல், விவசாய பயிர்களை சேதப்படுத்தும் வனவிலங்குகளை கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து ஆர்.டி.ஓ.,வின் நேர்முக உதவியாளரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.
