ADDED : மார் 12, 2026 05:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார்: விட்டல்நாயக்கன்பட்டி ஓட்டல் உரிமையாளரிடம் 3 பவுன் தங்க செயின், இரண்டு அலைபேசிகளை பறித்துச்சென்ற தந்தை , இரு மகன்கள் என 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
விட்டல் நாயக்கன்பட்டி கடைவீதியில் ஓட்டல் நடத்தி வருபவர் தொட்டியப்பன் 60. ஓட்டலில் துாங்கி கொண்டிருந்தபோது உள்ளே புகுந்த நபர்கள் இவரது கழுத்தில் அணிந்திருந்த மூன்று பவுன் தங்கச் செயினை பறித்ததோடு,இரு அலைபேசிகளையும் திருடி சென்றனர். வேடசந்துார் எஸ்.ஐ., பாலசுப்பிரமணி தலைமையிலான போலீசார் சி.சி.டிவி., பதிவுபடி செயின் பறிப்பில் ஈடுபட்ட சேனன்கோட்டை பால்பாண்டி 47, அவரது மகன்கள் சதீஷ்குமார் 22, சந்தோஷ் குமார் 19, ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து தங்க செயின் பறிமுதல் செய்யப்பட்டது.

