/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சுற்றுலா வாகன நிறுத்தம் அருகே ஓட்டலில் தீ
/
சுற்றுலா வாகன நிறுத்தம் அருகே ஓட்டலில் தீ
ADDED : பிப் 11, 2025 05:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநியில் தைப்பூசத் திருவிழா நடக்கிறது. பக்தர்கள் அதிக அளவில் நடமாட்டம் உள்ள பழநி முருகன் கோயில் இலவச சுற்றுலா வாகன நிறுத்தத்தின் அருகே தனியார் ஓட்டல் உள்ளது.
இந்த ஓட்டலில் நேற்று இரவு காஸ் சிலிண்டர் தீப்பற்றியது. அதையடுத்து தீ ஓட்டல், அருகிலுள்ள கடைகளில் பரவியது.
தீயணைப்புத் துறையினர் மாவட்ட அலுவலர் கணேசன் தலைமையில் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர் மக்கள் நடமாட்டம் அதிகம் இருந்த பகுதியில் திடீரென தீப்பிடித்ததால் பதட்டம் ஏற்பட்டது.

