ADDED : பிப் 12, 2026 06:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: நத்தம் தீயணைப்புத்துறை நிலையத்தில் தனியார், அரசு நிறுவனங்களில் பணிபுரியும் பாதுகாவலர்களுக்கு தீத்தடுப்பு நடைமுறைகள், பாதுகாப்பு வழிமுறைகள் தொடர்பான விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடந்தது.
நிலைய அலுவலர் விவேகானந்தன், உதவி அலுவலர் அம்சராஜன் உள்ளிட்ட தீயணைப்பு வீரர்கள் பங்கேற்று, தீ விபத்தை கட்டுப்படுத்தும் நடைமுறைகள், மீட்புப் பணிகளில் தீயணைப்பு வீரர்கள் செயல்படும் விதம் குறித்து விளக்கிப் பேசினர்.

