/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
'கொடை' யில் சாரலுடன் பனிமூட்டம் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
/
'கொடை' யில் சாரலுடன் பனிமூட்டம் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
'கொடை' யில் சாரலுடன் பனிமூட்டம் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
'கொடை' யில் சாரலுடன் பனிமூட்டம் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ADDED : ஜன 27, 2026 05:30 AM

கொடைக்கானல்: கொடைக்கானலில் இடைவிடாத சாரல் மழை, பனிமூட்டத்தால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
விடுமுறையால் ஏராளமான பயணிகள் குவிந்ததால் இரு தினங்காளாக கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவு முதல் இடைவிடாது சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. அடர் பனிமூட்டம் நிலவியதால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத நிலையில் வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்டு சென்றன.
சாரல் மழை, பனிமூட்டத்திற்கு இடையே பயணிகள் ஏரியில் படகு, ஏரிச்சாலையில் குதிரை, சைக்கிள் சவாரி செய்து மகிழ்ந்தனர். முக்கிய சுற்றுலா தலங்களில் பயணிகளின் வருகை அதிகரித்திருந்த போதும் சீதோஷ்ண நிலை மாற்றத்தால் அவதியடைந்தனர். காற்றில் ஈரப்பதம் அதிகரித்து குளிரும் நிலவியது.

