ADDED : ஜன 22, 2026 05:45 AM
அ நிறம் | அளவு
நத்தம்: கோசுகுறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. வடக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் பழனிச்சாமி தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., ஆண்டி அம்பலம், தி.மு.க., தெற்கு ஒன்றிய செயலாளர் ரத்தினக் குமார்,பள்ளி தலைமையாசிரியர் சுரேஷ் முன்னிலை வகித்தனர்.
80 மாணவர்களுக்கு விலை இல்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டது. தி.மு.க., வடக்கு ஒன்றிய பொருளாளர் கலிபுல்லா, ஊராளிபட்டி முன்னாள் ஊராட்சி தலைவர் தேனம்மாள் தேன்சேகர் கலந்து கொண்டனர்.
