ADDED : ஜன 23, 2026 06:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செந்துறை: செந்துறை அரசு மேல்நிலைப்பள்ளியில் அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது.
வடக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் பழனிச்சாமி தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., ஆண்டிஅம்பலம்,தி.மு.க., மாவட்ட பொருளாளர் விஜயன், தெற்கு ஒன்றிய செயலாளர் ரத்தினக்குமார் முன்னிலை வகித்தனர்.
பள்ளி தலைமையாசிரியை தேவ மனோகரி வரவேற்றார்.
272 மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டது. உதவி தலைமையாசிரியர்கள் ராஜாக்கிளி, வாசுகி, மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளர் மதியரசு, வடக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் குமரவடிவேல், தி.மு.க., நிர்வாகிகள் பாலமுருகன், அயூப்கான் கலந்து கொண்டனர்.

