sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

தடையை மீறி கூம்பு ஒலி பெருக்கிகள் பயன்பாடு தாராளம்

/

தடையை மீறி கூம்பு ஒலி பெருக்கிகள் பயன்பாடு தாராளம்

தடையை மீறி கூம்பு ஒலி பெருக்கிகள் பயன்பாடு தாராளம்

தடையை மீறி கூம்பு ஒலி பெருக்கிகள் பயன்பாடு தாராளம்

8


ADDED : ஜூன் 02, 2025 12:50 AM

Google News

ADDED : ஜூன் 02, 2025 12:50 AM

8


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் வாகனங்களில் குறிப்பிட்ட அளவு டெசிபல் ஒலி எழுப்பும் பாக்ஸ் ரக ஒலிபெருக்கிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது.

23 ஆண்டுகளுக்கு முன் அதிக ஒலி மாசு ஏற்படுத்துவதாக இவற்றின் மீது தடை விதிக்கப்பட்டது. ஆனால் கோயில் விழாக்கள் ,பொது நிகழ்ச்சிகள் மட்டுமின்றி அரசு விழாக்களிலும் இவற்றின் கட்டுப்பாடற்ற பயன்பாடு தாராளமாக பெருகி வருகிறது. அளவிற்கு மீறிய கூம்பு வடிவ, பாக்ஸ் ரக ஒலிபெருக்கிகள், சம்பந்தப்பட்ட பகுதிகளில் குடியிருப்போர் மட்டுமின்றி வாகனங்களில் செல்வோர், பாதசாரிகள் பாதிப்பிற்குள்ளாகும் நிலை அதிகரித்து வருகிறது. இவை தவிர பள்ளி, கல்லுாரி, வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பகுதிகளிலும் இவற்றின் உபயோகத்தை கட்டுப்படுத்த முடியாத அவலநிலையும் உள்ளது.

இவற்றின் பயன்பாடு மூலம் காது கேளாமை, தடுமாற்றத்தால் விபத்துக்கள், இதய நோய் பாதிப்படையோரை அவதிக்குள்ளாக்கும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். இப்பிரச்னை தொடர்பாக சமூக ஆர்வலர்கள் பலர் நீதிமன்றம் மூலம் தீர்வு காண முயன்றனர்.

இதில் கட்டுப்பாடுகளை வலியுறுத்தி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன. இருப்பினும் இதனை செயல்படுத்துவதில் போலீஸ், வருவாய் உள்ளிட்ட துறை அதிகாரிகள் அரசியல், செல்வாக்கு, கவனிப்பு போன்றவற்றால் அலட்சியமாக உள்ளனர். இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us