/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
/
அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
ADDED : டிச 29, 2025 06:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: -நத்தம் அருகே சிறுகுடி அரசு பள்ளியில் 30 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த முன்னாள் மாணவர்கள் தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
நத்தம் சிறுகுடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 1995-ம் ஆண்டில் 10-ம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் 30 வருடங்களுக்கு பிறகு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சந்தித்து கொண்டனர். தொடர்ந்து கேக் வெட்டி, குழுவாக நின்று புகைப்படம் எடுத்து கொண்டனர்.அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.

