ADDED : மார் 18, 2024 07:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை : அய்யலுார் ஆர்.வி.எஸ்., குமரன் கலை அறிவியல் கல்லுாரியில் 3வது பட்டமளிப்பு விழா நடந்தது.
கல்லுாரி குழும இயக்குனர் கிருஷ்ணக்குமார் தலைமை வகித்தார். முதல்வர் திருமாறன் முன்னிலை வகித்தார். பேராசிரியர் சிவக்குமார் வரவேற்றார்.
பல்கலை அளவில் ரேங்க் பெற்ற மூவர் உட்பட 360 இளங்கலை, முதுகலை மாணவர்களுக்கு மதுரை காமராஜ் பல்கலை வளர்ச்சித்துறை டீன் கண்ணாதாஸ் பட்டங்களை வழங்கினார். முதன்மை நிர்வாக அலுவலர் பாரி, முதன்மை செயல் அலுவலர் வேணுகோபால்முருகதாஸ், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

