ADDED : அக் 20, 2024 05:35 AM
அ நிறம் | அளவு
திண்டுக்கல், : கல்குவாரியில் காவலாளி மர்மமானமுறையில் இறந்த வழக்கை போலீசார் முறையாக விசாரிக்க கோரி உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
சிவகங்கை ஒக்கூர் பழைய வளைவு பகுதியை சேர்ந்தவர் ரவி.
இவர் வேடசந்துார் குருநாதநாயக்கனுாரில் செயல்படாத கல்குவாரியில் காவலாளியாக வேலை செய்தார்.
நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள மாட்டுக்கொட்டகையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இவரது உடல் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ரவி மர்மமான முறையில் இறந்ததால் இந்த வழக்கை முறையாக விசாரித்து கொலைக் குற்றவாளிகளை கைது செய்ய கோரி ரவியின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். யாரும் பேச்சுவார்த்தைக்கு வராததால் கலைந்து சென்றனர்.
