ADDED : அக் 17, 2024 05:55 AM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்: திண்டுக்கல் காப்பிய பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஹேம தயாள வர்மன்33.
இவர் செப்.25ல் பாரப்பட்டி அம்மா குளக்கரையில் நடந்து சென்ற போது முன்விரோதம் காரணமாக குளிப்பட்டி வினோத்குமார் 28, பொம்மைய கவுண்டன்பட்டி கவி24, கோடாங்கி நாயக்கன்பட்டி மாரிமுத்து 49, சக்தி நாயக்கம்பட்டி பகவதி 28, ஆகியோர் வெட்டி கொலை செய்தனர்.
இதேபோல் வேடசந்துார் சமத்துவபுரம் அருகே மாசி44, என்பவரை செப்.26ல் பெருமாள் கவுண்டம்பட்டி மருமோகன் 26, எரியோடு சரவணகுமார் 23, கொலை செய்தனர்.
கொலையாளிகள் ஆறு பேர் மீது எஸ்.பி., பிரதீப் பரிந்துரையில் கலெக்டர் பூங்கொடி உத்தரவில் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
