sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

ஊருக்கு உதவிய சித்தருக்கு குருபூஜை

/

ஊருக்கு உதவிய சித்தருக்கு குருபூஜை

ஊருக்கு உதவிய சித்தருக்கு குருபூஜை

ஊருக்கு உதவிய சித்தருக்கு குருபூஜை


ADDED : ஜன 12, 2025 05:09 AM

Google News

ADDED : ஜன 12, 2025 05:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடமதுரை: வடமதுரை அருகே கிராமத்தில் தங்கி உதவிகள் செய்த கேரளாவை சேர்ந்த அடிகளாருக்கு நன்றி மறவாமல் மக்கள் கோயில் கட்டியதுடன் ஆண்டுதோறும் குருபூஜையும் நடத்தி வருகின்றனர்.

கேரளா மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் சங்கரானந்தன். சிறுவயதிலே சிங்காரக்கோட்டை பாறைப்பட்டியில் தங்கி வாழ் முழுவதையும் இங்கே கழித்தார். குடிநீர் பஞ்சம் ஏற்பட்ட நேரத்தில் கிணறு வெட்டினார். ஆடு, மாடு போன்றவை நோய் வாய்ப்பட இவரது மருத்துவத்தால் குணமாகின. இதனால் இவரை சங்கரானந்த சுவாமிகள் என ம்ககள் அழைத்தனர். இறுதி காலத்தில் தனக்கென சமாதியை கட்டி வைத்து உயிர் துறந்தார்.

கிராமத்தினர் அவரது விருப்பபடி சமாதியில் அடக்கம் செய்தனர். அவரது நினைவாக ஆண்டுதோறும் மார்கழி கார்த்திகை நட்சத்திர நாளில் அவரது சேவைக்கு நன்றிக்கடன் செய்வது போல் குரு பூஜை விழா நடத்துகின்றனர். 2015ல் சமாதியை கோயிலாக மாற்றி சிவன் சிலை வைத்து கும்பாபிஷேகம் நடத்தினர். இங்கு குருபூஜை திருவிழா போலவே நடத்தப்படுகிறது.

கருத்து வேறுபாட்டால் கோயிலை நிர்வகிக்கும் சங்கரானந்த சுவாமிகள் அறக்கட்டளை தரப்பினர் மடத்திலும், மற்றொரு தரப்பினர் ஊர்மந்தை என இரு இடங்களில் ஒரே நேரத்தில் குரு பூஜை நடத்தினர். போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட குரு பூஜையில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கேரளா சங்கரானந்த சித்தரின் உறவினர்களும் பூஜையில் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us