/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஊருக்கு உதவியவருக்கு குருபூஜை 84 ஆண்டாக தொடரும் வழிபாடு
/
ஊருக்கு உதவியவருக்கு குருபூஜை 84 ஆண்டாக தொடரும் வழிபாடு
ஊருக்கு உதவியவருக்கு குருபூஜை 84 ஆண்டாக தொடரும் வழிபாடு
ஊருக்கு உதவியவருக்கு குருபூஜை 84 ஆண்டாக தொடரும் வழிபாடு
ADDED : ஜன 25, 2025 05:13 AM

வடமதுரை :  வடமதுரை அருகே கா. புதுப்பட்டியில் தங்கி மக்களுக்கு பல்வேறு உதவிகள் செய்த மதுரை  மகானுக்கு நன்றி கடனாக திருவிழா போல்  கிராமத்தினர் 84வது குருபூஜையை நடத்தினர்.
மதுரை மாவட்டம் அழகர்கோவில் அடுத்த பில்லிச்சேரியில் 1874ல் பிறந்தவர் சபாபதி. தனது 16வது வயதில் வீட்டைவிட்டு வெளியேறி வடமாநிலத்திற்கு சென்றார். அங்குள்ள திருத்தலங்களை தரிசித்துவிட்டு வடமதுரையில் சில ஆண்டுகள் தங்கினார்.  பின்னர் காணப்பாடி   புதுப்பட்டியில் கள்ளிமரத்தடியில் தங்கிய அவர் மீது மட்டும் மழை நீர் பெய்யாமல் இருந்தது. அவரிடம் ஏதோ மகத்துவம் இருப்பதாக எண்ணி பக்தி கொண்ட மக்கள், 'கள்ளியடி சுவாமிகள்'  என அழைத்தனர்.  கிராமத்தில் தங்கி கிராம நலனுக்காக பல நல்ல காரியங்களை செய்த அவர் 1941ம் ஆண்டு ஜன.21ல்  சமாதி அடைந்தார்.
அவரது நினைவாக இங்கு கோயில் கட்டி உள்ள கிராம மக்கள் ஆண்டுதோறும்  அவரது இறந்த நாளின் நட்சத்திரத்தை அடிப்படையாக கொண்டு குரு பூஜை  நடத்துகின்றனர். நேற்று  முன் தினம் 84வது ஆண்டாக நடந்த குரு பூஜையில்  பால்குட ஊர்வலம் நடந்தது.   3500 கிலோ அரிசி, 260 கிலோ நிலக்கடலை பருப்பு, 525 கிலோ நல்லெண்ணெய், 400 கிலோ புளி கொண்டு  'மெகா' புளியோதரை பிரசாதம் தயாரிக்கப்பட்டது. சுற்று ப்பகுதிகளை சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் சுவாமியை வழிப்பட புளியோதரை பிரசாதம் வழங்கப்பட்டது.

