நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: வடமதுரை, கா.புதுப்பட்டி பகுதிகளில் தங்கி மக்களுக்கு நற்பணிகள் செய்தவர் கள்ளியடி குருநாதர். 1941ல் ஜீவசமாதி அடைந்த இவரது நினைவாக மாசி விசாக நட்சத்திர நாளான நேற்று வடமதுரை மேற்குரத வீதியில் உள்ள மடத்தில் 44வது குரு பூஜை விழா நடந்தது.
சித்திமுக்தி விநாயகர் கோயிலில் அபிஷேக, ஆராதனை நடந்தது. பின் அலங்கார ரதத்துடன் குருநாதர் பட ஊர்வலம், அன்னதானம், கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

