நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி : பழநி வட்டார போக்குவரத்து துறை சார்பில் சாலை பாதுகாப்பு மாத விழா ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம் பழநி திருநகரில் துவங்கியது. டி.எஸ்.பி.,சுப்பையா துவங்கி வைத்தார். ஊர்வலம் திண்டுக்கல் சாலை புதுதாராபுரம் ரோடு, கான்வென்ட் ரோடு வழியாக வந்தது.
இருசக்கர வாகன ஓட்டிய போலீசார் ஹெல்மெட் அணிந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஊர்வலமாக வந்தனர். வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஜெயகவுரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.