/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
உயரமான பேரிகார்டுகள்; வாகன ஓட்டிகள் திணறல்
/
உயரமான பேரிகார்டுகள்; வாகன ஓட்டிகள் திணறல்
ADDED : ஜூலை 03, 2025 04:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாவட்டத்தில் உள்ள நான்கு வழிச்சாலைகள், சர்வீஸ் ரோடுகள் இணையும் பகுதி, பிரதான முக்கிய ரோடுகளை இணைக்கும் பகுதிகளில் வைக்கப்படும் பேரிகார்டுகள் மிகவும் உயரமாக உள்ளன.
மேலும், அதில் விளம்பரங்கள் பெரிதளவில் உள்ளதால், எதிர்புறம் வரும் வாகனங்கள் தெரிவதில்லை. குறிப்பாக இரு சக்கரம் மற்றும் சிறு வாகனங்களில் செல்வோர் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்துகள் நடக்கிறது. விளம்பரத்தின் அளவையும், குறைந்த உயரமுடைய பேரிகார்டுகளையும் வைக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.