/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்
/
கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 10, 2026 07:13 AM

திண்டுக்கல்: அனைத்து அரசு கலைக் கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் பல்கலை மானியக்குழு நிர்ணயித்த ரூ.57 ஆயிரத்து 800 ஊதியத்தை வழங்க வேண்டும்.
12 மாதங்கள் ஊதியம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, திண்டுக்கல் எம்.வி.எம்., அரசினர் மகளிர் கலைக்கல்லுாரி நுழைவாயில் முன் வாயில் முழக்க ஆர்ப்பாட்டம் நடந்தது. 89 கவுரவ விரிவுரையாளர்கள் வகுப்புக்களை புறக்கணித்து பங்கேற்றனர். இதனால் மாணவிகளின் கற்பித்தல் பணிகள் பாதிக்கப்பட்டன.
நிலக்கோட்டை: நிலக்கோட்டை அரசு பெண்கள் கல்லுாரியில் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவுரவ விரிவுரையாளர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர். மகப்பேறு விடுப்பு, யுஜிசி நிர்ணயம் செய்த ரூ.58,700 சம்பளம், பணியின் போது இறக்கும் விரிவுரையாளர்களுக்கு இழப்பீடாக ரூ. 25 லட்சம், 12 மாதங்களும் சம்பளம், இ.எஸ்.ஐ., பி.எப்., ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை தொடர்வது புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர்.

