ADDED : மார் 19, 2025 05:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் திண்டுக்கல் ரவுண்டுரோடு புதுாரில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது.
கிளை தலைவர் இலியாஸ், வைகைச் செயலாளர் பாபுஜி தலைமை வகித்தனர். பாட்ஷா, கமால்பாட்ஷா, தஸ்தகிர், ஆட்டோ ஜமால், மில் பாபு, சபி, சேக் பரீத் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் அப்துல் ஹாலிக், மாநகராட்சி மேயர் இளமதி தொடங்கி வைத்தனர். தலைவர் நைனா முகமது, மேற்கு மண்டல தலைவர் பிலால் உசேன், காங்., மாநகர மாவட்ட தலைவர் துரை மணிகண்டன், மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் பிரபாகரன், கம்யூ., சேக் அப்துல்லா, கவுன்சிலர்கள் சித்திக், ஹசீனா காஜாமைதீன் பங்கேற்றனர்.ஏற்பாடுகளை செயலாளர் ஜமால் முகமது செய்தார்.