ADDED : மார் 08, 2026 04:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் சமய நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக மும்மதத்தினர் பங்கேற்ற இப்தார் நோன்பு திறப்பு நிகழ்வு நடந்தது. தன்னார்வல அமைப்புத் தலைவர் சதீஸ்குமார் தலைமை வகித்தார்.
செயலாளர் தனராஜ், பொருளாளர் சையது சூரஜ் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் அமைச்சர் சீனிவாசன், பழநி எம்.எல்.ஏ., செந்தில்குமார், மேயர் இளமதி, பாதிரியார் நெப்போலியன், புரவலர் திபூர்சியஸ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். தேசிய ஒருமைபாட்டு உறுதிமொழி, மும்மத பஜன் இசைக்கப்பட்டது. மாலை 6:40 மணிக்கு நோன்பு திறக்கப்பட்டது.

