/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சட்டவிரோத மது, கஞ்சா விற்பனை அதிகரிப்பு ...: போதை நபர்களால் மக்கள் அச்சம்
/
சட்டவிரோத மது, கஞ்சா விற்பனை அதிகரிப்பு ...: போதை நபர்களால் மக்கள் அச்சம்
சட்டவிரோத மது, கஞ்சா விற்பனை அதிகரிப்பு ...: போதை நபர்களால் மக்கள் அச்சம்
சட்டவிரோத மது, கஞ்சா விற்பனை அதிகரிப்பு ...: போதை நபர்களால் மக்கள் அச்சம்
ADDED : ஜூலை 20, 2025 04:58 AM

மாவட்டத்தில் 152 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. இதுதவிர எப்.எல்.1, எப்.எல்.2, எப்.எல்.3 உரிமம் பெற்ற மதுபானக்கூடங்களும், எலைட் கடைகளும் செயல்பட்டு வருகின்றன.
மதியம் 12:00 மணி முதல் இரவு 10:00மணி வரை திறந்திருக்கும் டாஸ்மாக் கடைகளில் தினமும் குடிமகன்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
மதுபோதை தலைக்கேறிய நிலையில் சிலர் ரோட்டில் விழுந்துகிடப்பதும், தகராறு செய்யும் சம்பவங்களும் அடிக்கடி நடக்கிறது.
பொது இடத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதம் குடிமகன்கள் செய்யும் அட்டகாசங்களும் சில நேரங்களில் முகம் சுளிக்க வைக்கிறது.
கொலை, திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் மது, கஞ்சா போதையின் விளைவாகவே நடக்கிறது.