/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ரோட்டோரங்களில் ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரிப்பு : அரசியல் கட்சியின் பின்புலத்தால் தாராளம்
/
ரோட்டோரங்களில் ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரிப்பு : அரசியல் கட்சியின் பின்புலத்தால் தாராளம்
ரோட்டோரங்களில் ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரிப்பு : அரசியல் கட்சியின் பின்புலத்தால் தாராளம்
ரோட்டோரங்களில் ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரிப்பு : அரசியல் கட்சியின் பின்புலத்தால் தாராளம்
ADDED : ஆக 10, 2025 02:49 AM

மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி என அனைத்து பகுதிகளின் ரோட்டோரங்களிலும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகிறது. ஆவின் உள்ளிட்டவை குறிப்பிட்ட இடங்களில் அனுமதி பெற்று வைக்கப்படுகிறது. இதையொட்டி ரோட்டோரம் முழுவதும் ஆக்கிரமிப்புகள் உள்ளன. குறிப்பாக அரசியல் கட்சியின் பிரமுகர்கள் பின்புலத்தில் இருப்பதால் இது போன்ற ஆக்கிரமிப்புகள் ஜோராக நடந்து வருகின்றன.ரோடுகள் மட்டும் ஆக்கிரமிக்கப்படுவதில்லை.
குளம், கண்மாய் தொடங்கி அனைத்துமே ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி உள்ளன. புதிய கடைகள், வணிக வளாகங்கள், வீடுகள் என கட்டடங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. இதற்கு கோயில் நிலங்களும் விதிவிலக்கல்ல. ஏதேனும் புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க சென்றால் அரசியல் கட்சியினரின் தலையீடுகள் அதிகளவில் இருக்கின்றன.
சமீப காலமாக இது அதிகரித்துள்ளது. இதனால் அதிகாரிகளும் தயக்கம் காட்டுகின்றனர்.
பொதுமக்கள் ஆக்கிரமிப்பு குறித்து தொடர்ந்து புகார் அளித்த வண்ணம் உள்ளனர்.
ஆனால் தீர்வுகள் ஏதும் கிடைப்பதில்லை. சாமன்ய ரோட்டோர மக்களின் வறுமையை பயன்படுத்தி அரசியல் கட்சியினர் இது போன்ற அரசு நிலங்களில் இடத்தில் உள் வாடகைக்கு விடும் சூழலும் இருக்கிறது.