ADDED : ஜூலை 06, 2025 03:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார்,: ேடசந்துார் தண்ணீர் பந்தம்பட்டி அரசு கல்லுாரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான புத்தாக்க பயிற்சி முகாம் நடந்தது.
இதன் நிறைவு விழாவிற்கு கல்லுாரி முதல்வர் சுமதி தலைமை வகித்தார். திண்டுக்கல் எம்.பி., சச்சிதானந்தம், மதுரை கருமாத்துார் அருளானந்தர் கல்லுாரி தமிழ் துறை தலைவர் ஜோசப் சார்லி ஆரோக்கியதாஸ் ,பேராசிரியர் பாலசுப்பிரமணியன் பேசினர். பங்கேற்ற எம்.பி.,யிடம் அரசு கல்லுாரிகளிலும் காலை, மதிய உணவு வழங்க மாணவர்கள் கோரினர்.