sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 தேவாங்கு பாதுகாப்பு மைய பணிகள் ஆய்வு

/

 தேவாங்கு பாதுகாப்பு மைய பணிகள் ஆய்வு

 தேவாங்கு பாதுகாப்பு மைய பணிகள் ஆய்வு

 தேவாங்கு பாதுகாப்பு மைய பணிகள் ஆய்வு


ADDED : டிச 17, 2025 05:59 AM

Google News

ADDED : டிச 17, 2025 05:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடமதுரை: அய்யலூர் பூனை கரட்டில் நடக்கும் தேவாங்குகள் பாதுகாப்பு ஆராய்ச்சி மைய கட்டுமான பணிகளை கூடுதல் தலைமைச் செயலரும், வனத் துறையின் செயலருமான சுப்ரியா சாஹூ ஆய்வு செய்தார்.

அய்யலுார், கரூர் மாவட்டம் கடவூர் மலைத்தொடர்களில் 11,806 எக்டேரில் அரிய வகை பாலுாட்டி விலங்கான தேவாங்கு அதிகளவில் வாழ்கின்றன.

தேவாங்கு இனம் அழியாமல் பாதுகாக்க சரணாலயம் அமைக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் நீண்ட ஆண்டுகளாக வலியுறுத்தியதன் பலனாக இந்தியாவின் முதல் தேவாங்கு வன உயிரின சரணாலயம் அய்யலுார் பகுதியில் அமைக்க அரசு முடிவு செய்தது.

அதன்படி சரணாலய திட்டத்தின் ஒருபகுதியாக தேவாங்கு பாதுகாப்பு ஆராய்ச்சி மையம் அய்யலுார் பூனை கரட்டில் கட்டப்பட்டு வருகிறது.

இங்கு சுற்று சூழல் சுற்றுலா, செங்குத்தான நடைபாதை, தேவாங்கு தொடர்பான குறும்படங்கள் திரையிட அரங்கு போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. தேவாங்குகள் விரும்பி உண்ணும் பூச்சிகள் அதிகம் வசிக்கும் சப்பாத்திக்கள்ளி, திருகு கள்ளி போன்ற தாவர வகைகளை வளர்க்கவும், அடர் வனப்பகுதியாக மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இங்கு நடக்கும் பணிகளை கூடுதல் தலைமை செயலர் சுப்ரியா சாஹூ ஆய்வு செய்தார். மண்டல வன பாதுகாவலர் முகமது ஷபாப், மாவட்ட வன அலுவலர் நாக சதீஷ் கிடிஜாலா, வனச்சரக அலுவலர் முருகேசன், வனவர் முரளி உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us