/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
இன்ஸ்பெக்டர் வாக்கிடாக்கி மாயம்
/
இன்ஸ்பெக்டர் வாக்கிடாக்கி மாயம்
ADDED : மார் 12, 2026 06:11 AM
கன்னிவாடி: திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன். காமலாபுரம்-- - செம்மடைப்பட்டி இடையே புதிய 4 வழிச்சாலை பணி நடக்கிறது. பல இடங்களில் தடுப்பு, மாற்றுப்பாதை அமைத்து ரோடு பணி மேற்கொள்ளப்படுகிறது. எச்சரிக்கையை மீறி நூற்றுக்கணக்கான வாகனங்கள் இத்தடத்தில் செல்கின்றன.
இவ்வழியில் செயின், அலைபேசி பறிப்பு சம்பவங்களும், விபத்துகளும் நடக்கின்றன. இதை தடுக்க இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டார்.
அலைபேசி அழைப்பு வந்ததால் வாக்கிடாக்கியை வாகனத்தின் மேல் வைத்துவிட்டு பேசிக்கொண்டிருந்தார். அப்போது வாக்கிடாக்கி மாயமானது. ஒலி அளவு குறைக்கப்பட்டிருந்ததால் அதன் இருப்பிடத்தை கண்டறிய முடியவில்லை. உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அதை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

