ADDED : நவ 27, 2025 05:50 AM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்: தொழிலாளர் நல சட்டங்களை முதலாளிகளுக்கு ஆதரவாக மத்திய அரசு திருத்துவதாக கூறி காப்பீட்டு கழக ஊழியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. திண்டுக்கல் - பழநி ரோடு எல்.ஐ.சி., அலுவலகம் முன்பாக நடந்த இதற்கு கிளைத் தலைவர் ஜான்சன் தலைமை வகித்தார்.
செயலாளர் ஜான்பால் முன்னிலை வகித்தனர். தென்மண்டல காப்பீட்டு கழக ஊழியர் கூட்டமைப்பு துணைத்தலைவர் வாஞ்சிநாதன் பேசினார்.
