sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 உள்ளாட்சி நிர்வாக, ஒப்பந்த பணிகளில் தலையீடு... நீடிப்பு தரமற்ற பணிகளால் தவிக்கும் ஊராட்சி செயலர்கள்

/

 உள்ளாட்சி நிர்வாக, ஒப்பந்த பணிகளில் தலையீடு... நீடிப்பு தரமற்ற பணிகளால் தவிக்கும் ஊராட்சி செயலர்கள்

 உள்ளாட்சி நிர்வாக, ஒப்பந்த பணிகளில் தலையீடு... நீடிப்பு தரமற்ற பணிகளால் தவிக்கும் ஊராட்சி செயலர்கள்

 உள்ளாட்சி நிர்வாக, ஒப்பந்த பணிகளில் தலையீடு... நீடிப்பு தரமற்ற பணிகளால் தவிக்கும் ஊராட்சி செயலர்கள்


ADDED : ஜன 02, 2026 05:59 AM

Google News

ADDED : ஜன 02, 2026 05:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரெட்டியார்சத்திரம் : திண்டுக்கல் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய, ஊராட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் 2025 ஜன. 5ல் முடிந்த நிலையில் முன்னாள் பிரதிநிதிகளின் ஆதிக்கத்தால் நிர்வாகம், ஒப்பந்த ஒதுக்கீடு, தரமற்ற பணிகள் நடப்பதாக புகார் எழுந்துள்ளது.

மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களில் 306 ஊராட்சிகள் உள்ளன. அனைத்து அமைப்புகளிலும் உள்ளாட்சி பிரதிநிதிகளாக அரசியல் கட்சி சார்ந்த நபர்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஒன்றியங்களில் பி.டி.ஓ.,க்கள், துணை பி.டி.ஓ.,க்கள் என நிர்வாக ரீதியிலான அதிகாரிகளின் கண்காணிப்பு பெயரளவில் மட்டுமே உள்ளது. பல இடங்களில் கலெக்டர் அலுவலகம், உதவி இயக்குனர் அலுவலகம், வீடியோ கான்பரன்சிங், கலந்தாய்வு கூட்டம், வெளி மாவட்ட பயிற்சி போன்ற காரணங்களை கூறி ஊராட்சி நிர்வாக செயல்பாடுகளை கண்காணிக்காததால் அலுவலர்கள் வருகையை தவிர்க்கின்றனர். சொந்த பணிகளில் கவனம் செலுத்துகின்றனர்.

பதவிக்காலம் முடிந்து 12 மாதங்களாகியும் அப்பகுதியை சார்ந்த முன்னாள் ஊராட்சி தலைவர், துணை த்தலைவர், உறுப்பினர், ஒன்றிய கவுன்சிலர் ஆதிக்கம் தொடர்கிறது. அலுவலக அறைகளில் அமர்ந்து ஊராட்சி நிர்வாகத்திற்கு தொடர்பு இல்லாத பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். கட்சி நிர்வாகிகள், ஒப்பந்ததாரர்களின் ஆதிக்கத்திற்கும் குறைவில்லை. கணினி, புதுவாழ்வு, வேலை உறுதி திட்ட பணிகளில் பெரும்பாலும் மகளிர் ஊழியர்கள் பணியில் உள்ளனர். இருப்பினும் முன்னாள் பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள், ஒப்பந்ததாரர்கள் எந் நேரமும் ஆக்கிரமித்து உள்ளனர்.

முன்னாள் பிரதிநிதிகள், ஆளுங்கட்சியினரின் நிர்வாக தலையீடு மக்களிடையே அதிருப்தி , தரமற்ற ஒப்பந்த பணிகள் வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கு சிக்கலையும் ஏற்படுத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது. ஆளுங்கட்சி நிர்வாகிகளால் மேற்கொள்ளப்பட்ட தரமற்ற பணிகள் சார்ந்த பிரச்னைகள் துறையினருக்கு மேலும் சிக்கலை ஏற்படுத் துவதாக அமைந்துள்ளது. இப்பிரச்னைகளுக்கு கடிவாளம் அமைக்கும் வகையில் கண்காணிப்பு பணிகளை மாவட்ட நிர்வாகம் முடுக்கி விட வேண்டும்.






      Dinamalar
      Follow us