/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சர்வதேச ஜவுளி தொழில் மாநாட்டில் பங்கேற்க அழைப்பு
/
சர்வதேச ஜவுளி தொழில் மாநாட்டில் பங்கேற்க அழைப்பு
சர்வதேச ஜவுளி தொழில் மாநாட்டில் பங்கேற்க அழைப்பு
சர்வதேச ஜவுளி தொழில் மாநாட்டில் பங்கேற்க அழைப்பு
ADDED : ஜன 10, 2026 07:40 AM
திண்டுக்கல்: திருப்பூரில் ஜனவரி 29, 30ல் தமிழ்நாடு அரசின் துணி நுால்துறை, இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் கோவை கொடீசியா வளாகத்தில் சர்வதேச ஜவுளித் தொழில் மாநாடு - 2026 நடக்க உள்ளது. இதில் தொழில் நிறுவனங்கள் பங்கேற்று காட்சியரங்குகள் அமைக்க ஜன.13க்குள் திருப்பூர் மண்டல துணை இயக்குனர் rddtextilestpr@gmail.com என் மின்னஞ்சல் முகவரியில் பதிவு செய்யலாம் '' என கலெக்டர் சரவணன் கேட்டுள்ளார்.
அவரது அறிக்கை : 2030க்குள் தமிழ்நாட்டை பொருளாதார ரீதியில் முன்னேற்ற முதல்வர் திட்டமிட்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக திருப்பூரில் இந்த மாநாடு நடக்க உள்ளது. மாநாட்டில் கருத்தரங்குகள், கண்காட்சி, வாங்குபவர் - விற்பவர்கள் சந்திப்பு, பேஷன் ஷோ, 100 காட்சி அரங்குகள் உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. காட்சியரங்குகள் அமைக்க விரும்பும் ஜவுளித் தொழில் நிறுவனங்கள் ஜன.13க்குள் திருப்பூர் மண்டல துணை இயக்குனர் அலுவலக மின்னஞ்சலில் விண்ணப்பிக்கலாம். மாநாட்டில் பங்கேற்பதன் மூலம் வெளிநாடு முதலீடு அதிகரித்து தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி பெரும். கூடுதல் விபரங்களுக்கு திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் 5வது தளம், அறை எண் 505ல் உள்ள மண்டல துணை இயக்குனர், துணிநுால்துறை, திருப்பூர் 641 604 என்ற முகவரி , 98942 60713, 94421 86070 ல் தொடர்பு கொள்ளலாம் என கேட்டுள்ளார்.

