/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
குடகனாறு அணை கோடவுனில் இரும்பு பொருட்கள் திருட்டு
/
குடகனாறு அணை கோடவுனில் இரும்பு பொருட்கள் திருட்டு
ADDED : ஏப் 28, 2025 06:29 AM
வேடசந்தூர்: வேடசந்தூர் அருகே அழகாபுரி குடகனாறு அணை கோடவுனில் ஏராளமான பழையஇரும்புகள் குவிக்கப்பட்டுள்ளன.
நேற்று முன்தினம்அதிகாலை 2:00 மணி அளவில் திடீரென, தொடர் சத்தம் கேட்டதைத் தொடர்ந்து உதவி பொறியாளர் மகேஸ்வரன், காவலாளி பரமசிவம் சென்று பார்த்தனர்.
அப்போது பழைய இரும்புகளை திருடிக் கொண்டிருந்த 5 நபர்கள் வாகனத்துடன் தப்பியது தெரிந்தது.
கூம்பூர் வழித்தடத்தில் சென்ற வேனை போலீசார் பிடித்தனர்.
இதில் பழநி சாமிநாதபுரம் ராஜா 26, சிவசங்கர் 23, சசிகுமார் 19, தாமரைச்செல்வன்40, திருப்பூர் சஞ்சய் குமார் 21 ஆகிய 5 பேரை கைது செய்தபோலீசார் ரூ.65 ஆயிரம் மதிப்புள்ள இரும்பு பிளேட்டுகளை கைப்பற்றினர். வேன் பறிமுதல் செய்யப்பட்டது.

