sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 வரத்து குறைவால் விலை உயர்ந்த பூக்கள் மல்லிகை கிலோரூ.3000 க்கு விற்பனை

/

 வரத்து குறைவால் விலை உயர்ந்த பூக்கள் மல்லிகை கிலோரூ.3000 க்கு விற்பனை

 வரத்து குறைவால் விலை உயர்ந்த பூக்கள் மல்லிகை கிலோரூ.3000 க்கு விற்பனை

 வரத்து குறைவால் விலை உயர்ந்த பூக்கள் மல்லிகை கிலோரூ.3000 க்கு விற்பனை


ADDED : டிச 18, 2025 06:09 AM

Google News

ADDED : டிச 18, 2025 06:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: தொடர் பனிப்பொழிவினால் பூக்களின் வரத்து குறைந்து விசேஷ நாட்கள் இல்லாத போதிலும் பூக்களின் விலை உயர்ந்து மல்லிப்பூ கிலோ ரூ.3 ஆயிரம் வரை விற்பனையானது.

திண்டுக்கல் நகரின் மையப்பகுதியில் அண்ணா வணிக வளாக பூ மார்க்கெட் உள்ளது. இங்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் விளைவிக்கப்பட்டு கொண்டு வரப்படுகிறது. இங்கிருந்து வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது.

வியாபாரிகள் மொத்தமாகவும், சில்லரையாகவும் வாங்கி செல் கின்றனர்.

தற்போது பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் செடியிலே பூக்கள் கருகி விடுவதால் மார்க்கெட்டிற்கு பூக்கள் வரத்து குறைவாக உள்ளது. இதன் காரணமாக நாள் ஒன்றுக்கு 50 டன் பூக்கள் விற்பனைக்கு வரக்கூடிய இடத்தில் 20 டன் பூக்கள் மட்டுமே விற்பனைக்கு வருகிறது. இதை தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு ரூ.1000 க்கு விற்பனையான மல்லிகை ரூ.3000 க்கு விற்பனையாகிறது.

பச்சை முல்லை ரூ. 1000, வெள்ளை முல்லை ரூ.800, ஜாதி ரூ. 900, காக்கரட்டான் ரூ. 800,ரோஸ் ரூ.150, சம்பங்கி ரூ.800, செண்டு மல்லி ரூ.40 அரளி ரூ.250, செவ்வந்தி ரூ.100 என விற்பனையாகிறது.






      Dinamalar
      Follow us