ADDED : ஜூலை 19, 2025 02:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நிலக்கோட்டை: நிலக்கோட்டை இ.பி., காலனியை சேர்ந்தவர் பிரத்திசெட்டி 30. தனியார் பிஸ்கட் கம்பெனியில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது உறவினருக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரைப் பார்ப்பதற்கு குடும்பத்துடன் வீட்டை பூட்டி சென்றார். வீட்டிற்கு வந்த போது பிரோ அனைத்தும் உடைக்கப்பட்டு இருந்தது.
நிலக்கோட்டை எஸ்.ஐ., அருண்குமார் தலைமையில் போலீசார் சோதனை செய்தனர். பீரோவில் இருந்த ஒன்றரை பவுன் நகை , 810 கிராம் வெள்ளி , ரூ. 4 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது தெரிந்தது. நிலக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.