ADDED : ஆக 28, 2026 05:21 PM
அ நிறம் | அளவு
நிலக்கோட்டை, ஆக.29
நிலக்கோட்டையில் நிலவை அகாடமி சார்பில் ஆண்கள், பெண்களுக்கு மாநில அளவிலான கபடி போட்டிகள் நடந்தது. உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் போட்டிகளை துவக்கி வைத்தார்.
பெண்கள் பிரிவில் வெற்றி பெற்ற காந்திகிராமம் கேந்திர வித்யாலயா பள்ளி அணிக்கு ரூ.5 ஆயிரம் பரிசுத்தொகை, கோப்பையை கூட்டுறவு தணிக்கை ஆய்வாளர் லதா வழங்கினார். ஆண்கள் பிரிவில் வெற்றி பெற்ற அணிகளுக்கு மொத்தம் ரூ.70 ஆயிரம் பரிசுத்தொகையை சர்க்கரை துறை ஆணையர் கண்ணன் வழங்கினார்.
அரசு கல்லுாரி மாணவிகளுக்கு சீருடைகள் வழங்கப்பட்டன. ஓவிய, பாட்டு, பேச்சுப்போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன.
