ADDED : ஜூலை 09, 2025 06:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : பழநிரோடு செல்லாண்டியம்மன் கோயில் வடக்கு தெரு பகுதி காளியம்மன் கோயில் 80ம் ஆண்டு ஆனி உற்ஸவ நடக்கிறது.
ஜூன் 24ல் சுவாமி சாட்டுதலுடன் துவங்கிய இந்த விழாவின் ஒரு பகுதியாக நேற்று பால்குட ஊர்வலம் நடந்தது.
மலையடிவாரம் தர்மசாஸ்தா கோயிலிலிரந்து நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம், தீச்சட்டி, அலகு குத்தி நேர்த்திக் கடனை செலுத்தினர். தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட காளியம்மன் தேரோட்டம் நடந்தது.
பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடனை செலுத்தினர்.

