sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 பழநி கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா நவ.27ல் துவக்கம்

/

 பழநி கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா நவ.27ல் துவக்கம்

 பழநி கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா நவ.27ல் துவக்கம்

 பழநி கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா நவ.27ல் துவக்கம்


ADDED : நவ 15, 2025 05:58 AM

Google News

ADDED : நவ 15, 2025 05:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி: பழநி கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா நவ.,27 காப்பு கட்டுதல் துவங்கி டிச.,3 வரை நடைபெற உள்ளது.

இக்கோயிலில் நவ.,27 மாலை 5:30 மணிக்கு சாயரட்சை பூஜையில் காப்பு கட்டுதல் உடன் கார்த்திகை தீபத் திருவிழா துவங்க உள்ளது. விழா நாட்களில் சண்முகார்ச்சனை, சண்முகர் தீபாராதனை, சின்ன குமாரசுவாமி தங்கச் சப்பரத்தில் எழுந்தருளல், யாகசாலை தீபாராதனை நடைபெறும். இரவு 7:30 மணிக்கு தங்கரத புறப்பாடு நடைபெறும்.

டிச.,2 மாலை 5:30 மணிக்கு பூஜை சாயரட்சை பூஜையில் பரணி தீபம் ஏற்றப்பட்டு சண்முகார்ச்சனை நடைபெறும். டிச.,3., அன்று மஹா கார்த்திகை தினத்தை முன்னிட்டு அதிகாலை 4:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம், விசேஷ பூஜைகளும் துவங்கும்.

மாலை 4:00 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெறும். மாலை 4:45 மணிக்கு சின்னகுமார சுவாமி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருள்வார். யாகசாலை தீபாராதனை நடைபெறும். முருகன்கோயிலில் நான்கு மூலைகளில் தீபம் வைக்கப்படும். பின் 6:00 மணிக்கு கார்த்திகை தீபம், சொக்கப்பனை ஏற்றுதல் நடைபெறும்.

அதன் பின் திருஆவினன்குடி, பெரியநாயகி அம்மன் கோயிலில் கார்த்திகை தீபம், சொக்கப்பனை ஏற்றப்படும். டிச.,3 மலைக் கோயிலில் தங்கரத புறப்பாடு நடைபெறாது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்கிறது.






      Dinamalar
      Follow us