sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 பல்வேறு சர்ச்சையில் சிக்கிய 'கொடை' வன அலுவலர் மாற்றம்

/

 பல்வேறு சர்ச்சையில் சிக்கிய 'கொடை' வன அலுவலர் மாற்றம்

 பல்வேறு சர்ச்சையில் சிக்கிய 'கொடை' வன அலுவலர் மாற்றம்

 பல்வேறு சர்ச்சையில் சிக்கிய 'கொடை' வன அலுவலர் மாற்றம்


ADDED : ஜன 24, 2026 02:05 AM

Google News

ADDED : ஜன 24, 2026 02:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: பல்வேறு சர்ச்சையில் சிக்கிய, கொடைக்கானல் மாவட்ட வன அலுவலர் உட்பட, 13 வனத்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில், மன்னவனுார், பேரிச்சம் போன்ற வனச்சரகங்களில், களை தாவரங்களை அகற்ற அனுமதி வழங்கப்பட்டது. அந்த அனுமதியை தவறாக பயன்படுத்தி, பழமையான, 1,200 சோலை மரங்களை வெட்டி எடுத்ததாக புகார் எழுந்தது.

இதில், வனச்சரகர் நிலையில், நான்கு பேர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

இது குறித்து விசாரிக்க, விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன், கொடைக்கானல், சென்பகனுாரில் நகராட்சி குப்பை கிடங்கில் இருந்த குப்பை, வனப்பகுதியில் கொட்டப்பட்டதாக புகார் எழுந்தது.

இவ்விவகாரத்தில், மாவட்ட வன அலுவலர் யோகேஷ் குமார் மீனா, நகராட்சி அதிகாரிகளுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டார். இந்நிலையில், இப்பகுதிக்கான மாவட்ட வன அலுவலர் யோகேஷ் குமார் மீனா, சென்னை வண்டலுார் வன உயிரின உயர் ஆராய்ச்சி மைய துணை இயக்குநராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இவர் தவிர, தலைமை வனப்பாதுகாவலர்கள், துணை இயக்குநர்கள் நிலையில், 12 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கான உத்தரவை வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலர் சுப்ரியா சாஹு பிறப்பித்துள்ளார்.






      Dinamalar
      Follow us