sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

வழக்கறிஞரிடம் ரூ.61.50 லட்சம் மோசடி-: பெண் உட்பட இருவர் கைது

/

வழக்கறிஞரிடம் ரூ.61.50 லட்சம் மோசடி-: பெண் உட்பட இருவர் கைது

வழக்கறிஞரிடம் ரூ.61.50 லட்சம் மோசடி-: பெண் உட்பட இருவர் கைது

வழக்கறிஞரிடம் ரூ.61.50 லட்சம் மோசடி-: பெண் உட்பட இருவர் கைது


ADDED : நவ 11, 2025 11:52 PM

Google News

ADDED : நவ 11, 2025 11:52 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே நிலம் வாங்கித்தருவதாக கூறி மதுரையை சேர்ந்த வழக்கறிஞரிடம் ரூ. 61.50 லட்சம் மோசடி செய்த வழக்கில் பெண் உட்பட இருவர் கைதுசெய்யப்பட்டனர்.

கரூர் மாவட்டம் மண்மங்கலம் தாலுகா அரங்கநாதபேட்டை அச்சமாபுரத்தை சேர்ந்தவர் தனசேகரன். உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞராக பணிபுரிகிறார். இவரின் உறவினர் கரூர் காந்திகிராமத்தை சேர்ந்த சத்தியமூர்த்தி 49 . இவர்வலிமையான மக்கள் கட்சிஎனும் அமைப்பின் நிறுவனத்தலைவராக உள்ளார்.

2021ல் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துார் வி.புதுக்கோட்டையை சேர்ந்த கமலம் என்பவருக்கு சொந்தமான 5ஏக்கர் நிலத்தை ரூ.75 லட்சத்துக்கு பேசிமுடிக்க சத்தியமூர்த்தி, இவரது நண்பர் தேக்கமலை உடன்தனசேகரன் சென்றார். முன்பணமாக ரூ.7 லட்சம் பெற்ற கமலம் கிரைய உடன்படிக்கை செய்துகொடுத்துள்ளார்.

நிலம் கிரையத்திற்காக ஆன்லைன் வங்கி பரிவர்த்தனையாக ரூ.1லட்சத்து 40 ஆயிரம் உட்பட பல்வேறு தவணைகளாக ரூ.61 லட்சத்து 40 ஆயிரத்தை சத்தியமூர்த்தி வழியாக கமலத்திற்கு கொடுத்துள்ளார். மாதங்கள் கடந்தும் கிரையம் செய்து கொடுக்க கமலம் முன்வரவில்லை. அலைபேசி எண்ணும் சுவிட்ச் ஆப் ஆனதால் சந்தேகமடைந்த தனசேகரன் நேரில் சென்று விசாரித்துள்ளார்.

நிலத்தை விற்க விருப்பம் இல்லாமல் அட்வான்ஸ் பணத்தை 6 மாதத்திலே சத்தியமூர்த்தியிடம் கொடுத்துவிட்டேன் என கமலம் கூறி உள்ளார். தனசேகரன் விசாரித்ததில், அட்வான்ஸ்தொகை கொடுக்கப்பட்டதாக கூறிய தேதியில் இருந்து அவரிடம் கமலம் என்ற பெயரில் பேசியவர் மேற்கு கரூர்நரசிம்மபுரத்தை சேர்ந்த ஹேமலதா 53 , கரூர் காந்திகிராமத்தை சேர்ந்த சுரேஷ்குமார், வானவில் பாஸ்கர்ஆகியோர் என்பதும் ஆள்மாறட்டம் செய்து போலி கிரைய உடன்படிக்கை ஒப்பந்த பத்திரம் தயாரித்து போலி கையெழுத்திட்டு சத்தியமூர்த்தி திட்டத்திற்கு துணைபோனதும் தெரியவந்தது.

தனசேகரன் திண்டுக்கல் எஸ்.பி., பிரதீப்பிடம் புகார் அளிக்க குற்றப்பிரிவு டி.எஸ்.பி.,குமரேசன்,எஸ்.ஐ.,ராஜாங்கம் விசாரணை நடத்தி சத்தியமூர்த்தி, ஹேமலதாவை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us