ADDED : நவ 28, 2025 08:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும் ஆன்லைன் பதிவு(இ-பில்லிங்) செய்வதற்கான அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும், ஆன்லைன் பதிவு முறையை கட்டாயமாக்குவதை நிறுத்தி வைக்கவேண்டும், வழக்கறிஞர் சேமநல நிதியை ரூ.25 லட்சமாக உயர்த்தி வழங்கவேண்டும், வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை இயற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் இன்று (டிச.28) கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபடுவதுடன், காலை 11:00 மணிக்கு மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபடுவதாக தலைவர் குமரேசன், செயலாளர் செல்வராஜ் கூட்டாக அறிவித்துள்ளனர்.

