ADDED : பிப் 12, 2026 06:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: பல்கலை மானியக்குழு நிர்ணயித்த ரூ. 57 ஆயிரத்து 800 ஊதியமாக வழங்க வேண்டும், 12 மாதங்கள் ஊதியம் வழங்கிட வேண்டும் என்பன உட்பட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து அரசு கலைக் கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் போராட்டம் நடந்து வருகிறது.
நேற்று 3ம் நாளாக, கூட்டமைப்பின் தலைவர் விஷ்ணுபிரியா தலைமையில் திண்டுக்கல் எம்.வி.எம்., அரசினர் மகளிர் கலைக் கல்லுாரி நுழைவாயில் முன் மாணவிகளுக்கு கோரிக்கை விளக்க துண்டு பிரசுரம் வழங்கி விரிவுரையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில்75 விரிவுரையாளர்கள் வகுப்புக்களை புறக்கணித்து பங்கேற்றனர். இதனால் கற்பித்தல் பணிகள் நேற்றும் பாதிக்கப்பட்டன.

