ADDED : பிப் 08, 2025 05:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல்: கொடைக்கானல் அட்டுவம்பட்டி அரசு கலை அறிவியல் கல்லுாரியில் கவுரவ விரிவுரையாளர்களாக 26 பேர் பணியாற்றுகின்றனர்.
குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படுகிறது. பல்கலைக்கழக பரிந்துரைப்படி நிர்ணயிக்கப்பட்ட சம்பளமும், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுபடி குறைந்தபட்சம் ரூ. 50 ஆயிரம் சம்பளம் வழங்கவும், பணி நிரந்தரம், பாதுகாப்பு வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோரிக்கை நிறைவேறும் வரை காலவரையற்ற உள்ளிருப்பு போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்தனர்.