/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
எல்.ஐ.சி., ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
/
எல்.ஐ.சி., ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 04, 2025 05:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வத்தலக்குண்டு: எல்.ஐ.சி., கிளை அலுவலகத்தில்  உணவு இடைவேளையில் எல்.ஐ.சி., கிளை ஊழியர்கள், முகவர்கள், வளர்ச்சி அதிகாரிகள் சங்கத்தின் சார்பாக    2025ம் ஆண்டுக்கான பட்ஜட்டில்  இன்சூரன்ஸ் துறையில் தனியார்
பன்னாட்டு நிறுவனங்களின் அந்நிய நேரடி முதலீட்டை நுாறு சதமாக உயர்த்துவதாக அறிவித்ததை  திரும்ப பெறக்கோரி   ஆர்ப்பாட்டம் நடந்தது.
எல்.ஐ.சி., கிளை ஊழியர் சங்கத் தலைவர் செந்தில் தலைமை வகித்தார்.
கிளை செயலாளர் ரமேஷ், கோட்டசங்க இணை செயலாளர் ரமேஷ்பாண்டியன்,  எல்.ஐ.சி. லியாபி முகவர் சங்க செயலாளர் ஜாகீர் உசேன், வளர்ச்சி அதிகாரி கோபால்  பேசினர். வளர்ச்சி அதிகாரி அருண் நன்றி கூறினார்.

