ADDED : பிப் 27, 2026 07:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: பழநி அருகே உள்ள முத்துநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் கட்டட தொழிலாளி பிரகாஷ் 34, 2024ல் 8, 9 வயது இரண்டு சிறுமிகளை தனியே அழைத்து பாலியல் பலாத்காரம் செய்தார்.பழநி மகளிர் போலீசார் பிரகாசை கைது செய்தனர்.
இதன் வழக்கு திண்டுக்கல் போக்சோ நீதிமன்றத்தில் நடந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் மைதிலி வாதாடினார். பிரகாஷ்க்கு ஆயுள் தண்டனை, ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சத்யதாரா தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு தமிழக அரசு தரப்பில் ரூ.5 லட்சம் நிவாரணத்தொகை வழங்கவும் உத்தரவிட்டார்.

