ADDED : பிப் 14, 2026 07:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி பழநியாண்டவர் கலை பண்பாட்டுக் கல்லுாரியில் முதல்வர் ரவிசங்கர் தலைமையில் அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக இளையோர் இலக்கிய பயிற்சி பாசறை நடைபெற்றது.
கல்லூரி செயலர் வெங்கடேஷ், தமிழ் வளர்ச்சித் துறை மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயந்தா, அகில இந்திய வானொலி முன்னாள் இயக்குனர் சுந்தர ஆவுடையப்பன் பங்கேற்றனர். பழநியாண்டவர் மகளிர் கலைக் கல்லுாரி, ஒட்டன்சத்திரம் பழநியாண்டவர் மகளிர் கலை அறிவியல் கல்லுாரி, ரெட்டியார்சத்திரம் அரசு கல்லுாரி, ஒட்டன்சத்திரம் தனியார் கல்லுாரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

