ADDED : பிப் 16, 2024 05:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் ,கனரா வங்கி சார்பில் ஜி.டி.என்., கல்லுாரியில் கல்விக் கடன் வழங்கும் முகாம் நடந்தது கலெக்டர் பூங்கொடி தலைமை வகித்தார்.
டி.ஆர்.ஓ., சேக்முகையதீன், ஆர்.டி.ஓ., கமலக்கண்ணன், கனரா வங்கி உதவிப் பொதுமேலாளர் பலானிரெங்கநாத், பாரத ஸ்டேட் வங்கி உதவிப் பொதுமேலாளர் திவ்யாதேஜா, கல்லுாரி முதல்வர் பாலகுருசாமி கலந்து கொண்டனர். 88 மாணவர்களுக்கு ரூ.3.54 கோடி மதிப்பிலான கல்விக் கடனுதவிக்கான கலெக்டர் பூங்கொடி வழங்கினார்.